கனமழை... சென்னை உட்பட 12 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை
சென்னை: கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வரலாறு காணாத கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 1 மாத காலமாக பள்ளி, கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டுள்ளன. அனைத்து பல்கலைக் கழகங்களிலும் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மழை தொடர்வதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்றும் நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், நெல்லை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல் புதுவையின் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.