For Quick Alerts
For Daily Alerts
Just In
கோடை விடுமுறை நீட்டிப்பு இல்லை... ஜுன் 1-ல் பள்ளிகள் திறப்பு- பள்ளிக் கல்வித் துறை
சென்னை : தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 1-ந் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.
கோடை வெயில் தாக்கத்தினால் பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், வெயிலின் தாக்கம் குறையாமல் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருப்பதால் பள்ளிகள் திறப்பு தாமதமாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து வழக்கம் போல ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும், பள்ளிகள் திறக்கப்படும் ஜூன் 1ம் தேதி, மாணவ, மாணவிகளுக்கான இலவசப் பொருட்கள் மற்றும் பஸ்பாஸ் போன்றவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
After complition of summer holidays, scholls will be commenced from june 1st said Department of School Education Tamilnadu.