25 தொகுதிகளில் தனித்து போட்டி..முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது எஸ்.டி.பி.ஐ
சென்னை: தமிழகத்தில் 25 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 3 தொகுதிகளிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சி தனித்து போட்டியிடுகிறது. இந்நிலையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.
திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி உடன்படிக்கை பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் அந்த கூட்டணியில் இருந்து எஸ்.டி.பி.ஐ கட்சி விலகுவதாக அக்கட்சியின் தலைவர் தெகலான் பாகவி அறிவித்தார்.
இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னை முத்தமிழ் நகரில் இன்று மாலை நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் தமிழகத்தில் 25 தொகுதிகளிலும், புதுவையில் 3 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அக்கட்சி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:
1.துறைமுகம் - எஸ். அமீர் ஹம்ஸா
2.திரு.வி.க.நகர் (தனி) புஸ்பராஜ்
3.கம்பம் - எஸ்.எம்.ரபீக் அஹமத்
4.வேலூர் - ஹாஜி ஷேக் மீரான்
5.திருவாடனை - ஷரீப் சேட்
6.மதுரை மத்தி - நஜ்மா
7.ராயபுரம் - கோல்டு ரபீக்
8.கடையநல்லூர் - மெளலவி ஜாபர் அலி உஸ்மானி
9.பாளையங்கோட்டை - மெளலவி சாஹுல் ஹமீத் உஸ்மானி
10.மானா மதுரை (தனி) காசிநாத துரை