பரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டசபை மே 29ல் கூடுகிறது!
தூத்துக்குடி கலவரம் உச்சமடைந்து இருக்கும் நிலையில் தமிழக சட்டசபை மே 29ல் கூடும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை: தூத்துக்குடி கலவரம் உச்சமடைந்து இருக்கும் நிலையில் தமிழக சட்டசபை மே 29ல் கூடும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த வருடத்தில் நடக்கும் இரண்டாவது தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இந்த மாதம் இறுதியில் தொடங்க இருக்கிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவையை தொடங்கி வைப்பார். இதில் பல முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் பேருந்து விலை உயர்வு பிரச்சனை, நீட் பிரச்சனை, காவிரி பிரச்சனை என நிறைய விஷயங்கள் புயலை கிளப்பி இருப்பதால் இந்த கூட்டத்தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல் முக்கியமாக தூத்துக்குடி துப்பாக்கி சூடு பெரிய அளவில் பிரச்சனையை கிளப்ப இருக்கிறது.
என்ன மாதிரியான விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் இன்று கூட்டம் கூட்டி விவாதிக்க இருந்தது. ஆனால் தூத்துக்குடி படுகொலையை தொடர்ந்து சட்டசபையின் அலுவல் ஆய்வு கூட்டத்தை திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் புறக்கணித்துள்ளது. அவர் அவையில் இருந்து வெளியே வந்த பின் சட்டசபையில் உள்ள முதல்வர் அறைக்கு வெளியே போராட்டம் செய்தனர். இதையடுத்து போலீஸ் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தது.
மே 29ம் தேதி இந்த கூட்டம் தொடங்க உள்ளது. ஜூலை 9ம் தேதிவரை சட்டசபை கூட்டம் நடக்கிறது. சட்டசபை அலுவல் கூட்டத்தில் திமுக வெளிநடப்பு செய்தபின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.