For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி உரிமை மீட்புக்கான 2-வது குழு : அரியலூரில் இருந்து 2ம் நாள் நடைபயணம் துவக்கம்

காவிரி உரிமை மீட்புக்கான இரண்டாவது குழு இன்று அரியலூரில் இருந்து 2ம் நாள் நடைபயணத்தை துவக்கியது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    காவிரி உரிமைகள் மீட்பு பயணம்

    அரியலூர் : காவிரி உரிமை மீட்பு நடைபயணத்திற்காக இரண்டாவது குழு இன்று அரியலூர் கீழப்பழுவூர் பேருந்து நிலையத்தில் இருந்து இரண்டாம் நாள் நடைபயணத்தைத் துவங்கியது.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், காவிரியில் டெல்டா விவசாயிகளின் உரிமையை மீட்கக் கோரியும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் காவிரி உரிமை மீட்பு நடைபயணம் கடந்த ஏப்ரல் 7ம் தேதி துவங்கியது.

    Second Team of Retrieve Cauvery Rights Rally Starts From Ariyalur

    காவிரி டெல்டா மாவட்டங்களில் நடக்கும் இந்த நடைபயணம் இன்று நான்காவது நாளை எட்டியுள்ளது. இதற்கான பயணத்தை திருவாரூர் மாவட்டத்தில் இருந்து இன்று காலை ஸ்டாலின் துவக்கியுள்ளார்.

    இதனிடையே, காவிரி உரிமை மீட்புக்கான இரண்டாவது குழு இன்று அரியலூர் கீழப்பழுவூர் பேருந்து நிலையத்தில் இருந்து இரண்டாவது நாள் நடைபயணத்தை துவக்கியுள்ளது.

    இந்த இரண்டாவது குழுவில் திமுகவின் ஆ.ராசா, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    English summary
    Second Team of Retrieve Cauvery Rights Rally Starts From Ariyalur. Retrieve Cauvery Rights Rally Campaign's second team that includes VCK Thirumavalavan, DMK A Rasa and Marxist Balakrishnan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X