ஓரணியில் திரண்ட மதச்சார்பற்ற கட்சிகள்.. அரசியல் நிகழ்வாக மாறிய இளங்கோவன் பிறந்த நாள் விழா!
ஈவிகேஎஸ் இளங்கோவன் பிறந்த நாள் விழாவில் தமிழ்நாட்டில் இருக்கும் மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரண்டு இருக்கிறது.
சென்னை: ஈவிகேஎஸ் இளங்கோவன் பிறந்த நாள் விழாவில் தமிழ்நாட்டில் இருக்கும் மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரண்டு இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தனது பிறந்தநாள் விழாவை சென்னை வேலப்பன்சாவடியில் கோலாகலமாக கொண்டாடினார். தமிழ்நாட்டில் இருக்கும் பல முக்கிய கட்சிகள் இதில் கலந்து கொண்டன.
இந்த விழா முழுக்க முழுக்க மதசார்பற்ற காட்சிகளின் விழா போல நடைபெற்றது. தமிழ்நாட்டில் இருக்கும் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் இதில் பேசினார்கள்.
முக்கியமாக வைகோ, ஸ்டாலின், குஷ்பு, திருமாவளவன், ப.சிதம்பரம் ஆகியோர் மிகவும் சிறப்பாக பேசினார்கள். இது பிறந்த நாள் விழா என்றாலும் அரசியல் தலைவர்கள் வந்த காரணத்தால், அரசியல் காரம் கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது.
காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் தொடங்கி பெரியாரின் போராட்டங்கள் வரை பல முக்கிய விஷயங்கள் குறித்து இதில் பேசினார்கள். மேலும் இது இளங்கோவனின் பிறந்த நாள் விழாவா பெரியாருக்கு நடத்தப்பட்ட விழாவா என்று கேட்கும் அளவிற்கு எல்லோரும் பெரியார் குறித்து பேசினார்கள்.
நாட்டில் மதப்பிரச்சனைகள் கொஞ்சம் தலை தூக்கி இருக்கும் நிலையில் அதற்கு எதிராக பல முக்கிய விஷயங்கள் இதில் பேசப்பட்டது. மேலும் கட்சி பாகுபாடு இன்றி நீண்ட நாளுக்கு பின் பல முக்கிய தலைவர்கள் ஒரே இடத்தில கூடி இருந்தனர்.