For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீட் தேர்வுக்கு இணையான கட்டுப்பாடு.. ரசிகர்களை சோதிக்கும் பாதுகாப்பு நடவடிக்கை.. இன்று என்ன நடக்கும்

சென்னை மைதானத்தில் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டியை பார்ப்பதற்கு எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது அதிக அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு நிறைய விதிமுறைகள்- வீடியோ

    சென்னை: சென்னை மைதானத்தில் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டியை பார்ப்பதற்கு எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது அதிக அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுத சென்ற மாணவர்களுக்கு இணையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது.

    சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று ஐபிஎல் போட்டி நடக்க உள்ளது. சென்னை அணிக்கும், கொல்கத்தா அணிக்கும் இடையில் இந்த போட்டி நடக்கிறது.

    இந்த போட்டிக்கு எதிராக காவிரிக்காக போராடி வரும் மக்கள் குரல் கொடுத்துள்ளனர். இதனால் அசம்பாவிதம் நடப்பதை தடுக்கும் விதத்தில் ரசிகர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    கட்டுப்பாடு

    கட்டுப்பாடு

    இந்த போட்டியை காண வரும் மக்கள் கருப்பு உடை அணிய கூடாது, செல்போன் எடுத்து செல்ல கூடாது, வாட்டர் கேன் கொண்டு செல்ல கூடாது, பெயிண்ட், பிளக்ஸ் பேனர் கொண்டு செல்ல கூடாது என்று அடுக்கடுக்காக கட்டுப்பாடுகள் விதித்து இருக்கிறார்கள். இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    எந்த வகையிலும் உள்ளே போராட்டம் உருவாக கூடாது என்று அரசு நினைக்கிறது. இந்த போராட்டத்தை எப்படியாவது முடக்க வேண்டும் என்ற காரணத்திற்காக இப்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. செல்போன் மூலம் புகைப்படம் எடுப்பது, பேஸ்புக்கில் தகவல் தெரிவித்து போட்டோ எடுப்பது என நிறைய விஷயங்கள் செய்ய முடியும் , அதை தடுக்கவே இப்படி விதிகள் விதிக்கப்பட்டுள்ளது.

    மோசம்

    மோசம்

    நீட் தேர்வின் போதும் இப்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அப்போது முழு கை சட்டை அணிந்து வந்தவர்களின் சட்டைகள் கிழிக்கப்பட்டது. பெண்களின் உள்ளாடைகள் கூட சோதனை செய்யப்பட்டது. அதன்பின் முடிகளில் எதுவும் வைத்து இருக்கிறார்களா என்று கூட சோதனை செய்தார்கள். அதேபோல் இப்போது விதிகள் விதிக்கப்பட்டுள்ளது.

    என்ன நடக்கும்

    என்ன நடக்கும்

    இன்று போட்டிக்கு தவறி கருப்பு உடை அணிந்து சென்றால் கூட அனுமதிக்கப்பட மாட்டார்கள். குழந்தைகள் கூட கருப்பு உடை அணிந்து செல்ல கூடாது. நீட் தேர்வு போலவே ஆடையை மாற்றிவிட்டு வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிப்பார்கள். அதே போல் செல்போன் எடுத்து சென்றால் வெளியே யாரிடமாவது கொடுத்துவிட்டு செல்ல வேண்டும், காலணிகளை கூட சோதனை செய்து அனுப்ப இருப்பதாக கூறப்படுகிறது.

    English summary
    Security concerns for Chennai IPL match equal the NEET exam rules regulation. Police gave certain regulation to avoin Cauvery protest inside the stadium.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X