For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முகிலன் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசதுரோக வழக்கு பாய்ந்தது

சமூக ஆர்வலர் முகிலன் மீது தேச துரோக வழக்கு பாய்ந்துள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

கரூர்: சமூக ஆர்வலர் முகிலன் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசதுரோக வழக்கு பாய்ந்துள்ளது.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்ற முகிலன் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். பல மாதங்களாக சிறையில் இருக்கும் முகிலன் மீது தற்போது தேசதுரோக வழக்கு பாய்ந்துள்ளது.

Sedition case filed against Activist Mukilan

அரவக்குறிச்சி அருகே பொதுக்கூட்டம் ஒன்றில் கடந்த ஆண்டு முகிலன், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் தற்போது தேசதுரோக வழக்கு பாய்ந்துள்ளது. இந்த வழக்கில் கரூர் நீதிமன்றத்தில் நேற்று முகிலன் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதேபோல் கரூர் வேலாயுதம்பாளையத்தில் அனுமதியின்றி ஊர்வலமாக வந்து உண்ணாவிரதம் இருந்ததாக மற்றொரு வழக்கும் முகிலன் மீது பாய்ந்துள்ளது.

English summary
Karur Police filed Sedition case against Social Activits Mukilan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X