இது அரச பயங்கரவாதம்.. நக்கீரன் கோபால் கைதுக்கு சீமான் கண்டனம்
சென்னை: நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் கைது செய்யப்பட்டிருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீ்மான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பத்திரிகையாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் கட்சியினர், பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பத்திரிகையாளர் 'நக்கீரன்' கோபால் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டு கைது செய்திருப்பது கருத்துச்சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் அரசப்பயங்கரவாதம்!
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) October 9, 2018
- சீமான் கடும் கண்டனம்!#NakkeeranGopal #Seeman #TnPolitics #TnGovt #TnGovernor @nakkheeranweb pic.twitter.com/D49cu5vk1M
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் , கோபால் கைதுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி விடுத்துள்ள டிவீட்டில், பத்திரிகையாளர் 'நக்கீரன்' கோபால் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டு கைது செய்திருப்பது கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் அரசப்பயங்கரவாதம் என்று சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.