தமிழர் உள்ளங்களிலும், இல்லங்களிலும், பொங்கட்டும் புரட்சிப் பொங்கல்.. சீமான் வாழ்த்து
சென்னை: தமிழர் உள்ளங்களிலும், இல்லங்களிலும், பொங்கட்டும் புரட்சிப் பொங்கல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:
அநீதி, அடக்குமுறை, பசி, பட்டினி, ஊழல், லஞ்சம், சாதீய இழிவு, தீண்டாமை, பெண்ணடிமை, மது மதப்போதை, பாலியல் சுரண்டல், ஏற்றத்தாழ்வு, நிலவளச் சுரண்டல், உலகமய ஏகாதிபத்திய பெருங்கொள்ளைக்கு எதிராக தமிழர் நலனுக்காக, ஒற்றுமைக்காக தமிழர் உள்ளங்களிலும், இல்லங்களிலும், பொங்கட்டும் புரட்சிப் பொங்கல்.
இவ்வாறு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அநீதி,அடக்குமுறை,பசி,பட்டினி,ஊழல்,
— சீமான் (@SeemanOfficial) January 14, 2020
லஞ்சம்,சாதீய இழிவு,தீண்டாமை, பெண்ணடிமை,மது மதப்போதை,பாலியல் சுரண்டல்,ஏற்றத்தாழ்வு,நிலவளச்சுரண்டல்,உலகமய ஏகாதிபத்திய பெருங்கொள்ளைக்கு எதிராக
தமிழர் நலனுக்காக, ஒற்றுமைக்காக
தமிழர் உள்ளங்களிலும்,
இல்லங்களிலும்,
பொங்கட்டும் புரட்சிப் பொங்கல்.. pic.twitter.com/xzM2s6CqOs