தமிழ் உணர்வுள்ளவர்கள் அரசியலுக்கு வாங்க: சீமான் அறைகூவல் - வீடியோ
தமிழ் உணர்வுள்ளவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைப்பு விடுத்துள்ளார்.
புதுச்சேரி: தமிழ் உணர்வுள்ளவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அக்கூட்டத்தில் பேசிய தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் உணர்வுள்ளவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என ஆவேசமாகப் பேசினார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி எப்படியாவது காலூன்ற வேண்டும் என நினைக்கிறது. அதற்காக தற்போது தமிழக அரசை ஆட்டுவித்து ஆட்சி செய்கிறது என்று கூறினார்.
தமிழகத்தில் ஊழல் மலிந்துள்ளது என நடிகர் கமல் கூறியதற்கு பாஜகவைச் சேர்ந்த தமிழிசை, எச்.ராஜா மற்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் தமிழகத்தில் ஊழல் என்று பொத்தாம்பொதுவாக ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டக்கூடாது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.