For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேயர் சைதை துரைசாமியின் தந்தை மரணம்.. சீமான் நேரில் ஆறுதல்

Google Oneindia Tamil News

கரூர்: சென்னை மேயர் சைதை துரைசாமியின் தந்தை கடந்த ஞாயிறன்று மறைந்ததை அடுத்து அவரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரான சீமான்.

மேயர் சைதை துரைசாமியின் தந்தை சாமியப்பன். அவர் கடந்த ஞாயிறன்று மாலை 5 மணிக்கு கரூரில் காலமானார். அவருக்கு வயது 100. சொந்த ஊரான கரூர் அருகில் உள்ள தும்பிவாடி கிராமத்தில் விவசாயத்தை கவனித்து வந்த அவர், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

Seeman met Saidai duraisamy and give consolation to him

மனிதநேய அறக்கட்டளையின் அறங்காவலர்களின் ஒருவரான சாமியப்பன், சென்னை வேளச்சேரியில் முதல்வர் ஜெயலலிதா பெயரிலான இலவச திருமண மண்டபத்திற்கு தன் பெயரிலான சொத்தை தானமாக எழுதிக் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவரது மறைவிற்கு துக்கம் விசாரிக்கவும், அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறும் வகையிலும் மேயர் சைதை துரைசாமியை கரூரில் அவரது இல்லத்தில் சந்தித்தார் சீமான்.

English summary
Naam Tamizhar party organizer Seeman met Saidai duraisamy and tribute his condolence for his father's death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X