For Daily Alerts
Just In
எங்கே போனீர்கள்.. என்ன செய்தீர்கள்.. ஏன் பேசலை.. ஏன் கேட்கலை.. ரஜினி மீது பாயும் கேள்விக் கனைகள்!
நடிகர் ரஜினிகாந்த்திடம் பாரதிராஜா, சீமான், அமீர் உள்ளிட்ட தலைவர்கள் அடுக்கடுக்காக பல சுளீர் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
Recommended Video
பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் கூட்டாக பேட்டி- வீடியோ
சென்னை: பொழுதுபோகலைனா இமயமலைக்கு போங்க, தேவையில்லாமல் களத்துக்கே வராமல் பேசாதீர்கள் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்டோர் ரஜினியை கடுமையாக சாடியுள்ளனர்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாரதிராஜா, சீமான், அமீர் உள்ளிட்டோர் ரஜினி முன் வைத்த கேள்விகளின் தொகுப்பு:
- ஆந்திராவில் 20 தமிழர்களை சீருடை அணிந்த போலீஸ் சுட்டுக் கொன்றதே அப்போது எங்கே போனார் ரஜினி
- கர்நாடகாவில் இருந்து லட்சக்கணக்கானோர் அகதிகளாக அடித்து விரட்டப்பட்டது வன்முறை இல்லையா?
- களத்துக்கு வந்து பார்க்காமல் கூட்டத்தில் நசுங்கி வேர்வை சிந்தாமல் பேசுவது எப்படி சரியாக இருக்க முடியும்?
- போராட்டத்தில் பங்கேற்ற என் தங்கைகளின் நெஞ்சில் கை வைத்து சீருடை அணிந்த போலீஸ் தள்ளிவிட்டது வன்முறை இல்லையா?
- உங்களுக்கு பொழுதுபோகவில்லை எனில் இமயமலைக்கு போக வேண்டியதுதானே? தேவையில்லாத பேச்சு எதற்கு?
- எங்கள் மீதான தாக்குதல்கள் வன்முறையாக தெரியவில்லையா?
- வீடியோவை பாருங்க.. காவலர்களை நான் தானே விலக்கி விட்டேன்? அதில் எங்கே இருக்கிறது வன்முறை? (சீமான்)
- ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்ற நிலையில் சீருடை அணிந்த காவலர்கள் தாக்கினார்களே? அது வன்முறை இல்லையா? அதை கண்டித்தீர்களா?
- போராட்டத்தின் என்னை கைது செய்தனர், அதை ரஜினி கேட்கவில்லையே ஏன்? (பாரதிராஜா)
- ரஜினியின் டுவிட்டர் பதிவு அதிகார வர்க்கத்துக்கு ஆதரவாகத்தானே உள்ளது?
- போராட்டக்களத்திற்கு வந்தால்தான் காவலர்கள் யார் என்பது பற்றி ரஜினிகாந்திற்கு தெரியவரும்.
ரஜினி பதில் சொல்வாரா... டிவிட்டரில் விழி வைத்துக் காத்திருப்போம்.
Comments
English summary
Seeman and more asks some question for Rajini as he supports public attack on police.
Story first published: Wednesday, April 11, 2018, 15:17 [IST]