For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதிக்கு பிறகு திமுகவும் உடையும்- சீமான் ஆருடம்

கருணாநிதிக்கு பிறகு திமுகவும் உடையும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நாகப்பட்டினம்: வைகோவிற்கு வயதான காலத்தில் கண்டகண்ட கனவு வருகிறது. கருணாநிதிக்கு பிறகு திமுகவும் உடையும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசியதாவது:

அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடத்தான் நேரம் சரியாக இருக்கிறது. மக்கள் பிரச்சனை பற்றி அ.தி.மு.க.விற்கு அக்கறை இல்லை.

மீனவர்கள் பிரச்சினை

மீனவர்கள் பிரச்சினை

தமிழக மீனவர் மீது இலங்கை ராணுவம் எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் எல்லை தாண்டி வந்தால் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என அறிவிக்கும் அரசு ஏன் இலங்கை ராணுவம் எல்லைத் தாண்டி மீனவர்களை தாக்கும் போது எல்லை தாண்டிய பயங்கரவாதம் என அறிவிக்கவில்லை.

ஹைட்ரோகார்பன் திட்டம்

ஹைட்ரோகார்பன் திட்டம்

கச்சத்தீவை மீட்க வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வரப்பட்டால் தமிழகம் சோமாலியா போல் மாறிவிடும்.

திமுகவும் உடையும்

திமுகவும் உடையும்

2 மாதமாக வைகோ கனவில் கருணாநிதி வந்தால் அதன்பேர் கனவா? வயதான காலத்தில் கண்டகண்ட கனவு வருகிறது. கருணாநிதிக்கு பிறகு தி.மு.க.வும் உடையும்.

அக்கறையில்லாத அரசு

அக்கறையில்லாத அரசு

நீட் தேர்வால் இனி தமிழன் யாரும் மருத்துவராக ஆக முடியாது. நீட் தேர்வு, விவசாயம், மீனவர் பிரச்சனை பற்றி அதிமுகவிற்கு அக்கறை இல்லை. அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடத்தான் நேரம் சரியாக இருக்கிறது. மாநில உரிமைகளை தமிழக அரசு படிப்படியாக பறிகொடுத்து விட்டது.

இவ்வாறு சீமான் பேசினார்.

English summary
Naam Tamilar Party leader Seeman has slamed AIADMK Government has lost Tamil Nadu State rights. DMK will splits after Karunanidhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X