போயஸ் கார்டன் +ஓ.பி.எஸ்ஸுக்கு நெருக்கமான சேகர் ரெட்டிக்கு ஜாமீன் மறுப்பு!
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சேகர்ரெட்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சேகர்ரெட்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுக்களையும் சென்னை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதேநேரத்தில் சேகர் ரெட்டி கூட்டாளிகளான திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெ.சேகர் ரெட்டி, இவர் போயஸ் கார்டனுக்கு நெருக்கமானவர் ஆவர். இவரது வீட்டின் இவரின் கூட்டாளிகள் வீட்டிலும், கடந்த டிசம்பர் மாதம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில், ரூ.147 கோடி பணம், 178 கிலோ அளவுக்கு தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து, ரூ.34 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகளை பதுக்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பேரில், சேகர் ரெட்டி, கே.சீனிவாசலு, பிரேம்குமார், திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகிய 5 பேரை சிபிஐ போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் சேகர்ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகிய 3 பேரின் ஜாமீன் மனுவை சென்னை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அதேநேரத்தில் சேகர் ரெட்டி கூட்டாளிகளான திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தினமும் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சிபிஐ நீதிமன்றம் இருவரையும் ஜாமீனில் விடுவித்துள்ளது.