For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக முதல்வரை கண்டு இயற்கை சீற்றங்களே அஞ்சுகின்றன- செல்லூரார் அதகளம்

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

மதுரை: தமிழக முதல்வரை கண்டு இயற்றை சீற்றங்களே அஞ்சுகின்றன என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

Sellur Raju says Natural disaster afraid of CM

இந்த விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர் பி உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அந்த விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில் கருணாநிதியின் இறுதிச் சடங்கில் முதல்வரும் அமைச்சர்களும் ஏன் பங்கேற்கவில்லை என சிலர் கேட்கின்றனர்.

ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் ஸ்டாலின் கலந்து கொண்டாரா. அவர் ஏன் பங்கேற்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். ஜெயலலிதாவின் ஆன்மா எடப்பாடி பழனிச்சாமியின் உள்ளே புகுந்து பணியாற்றுகிறோ என்ற சந்தேகம் மூத்த அமைச்சர்களுக்கும் உண்டு என்று அமைச்சர் ஆர். பி உதயகுமார் தெரிவித்தார்.

தமிழக முதல்வரை கண்டு இயற்கை சீற்றங்களே அஞ்சுகின்றன என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். இது போல் பஞ்ச் டயலாக்குகள் , அதகளப்படுத்தும் டயலாக்குகளை பேசுவதில் செல்லூராருக்கு நிகர் செல்லூரார்தான்.

English summary
Sellur Raju says Natural disaster afraid of CM in Madurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X