அனிதா மரணம்.. எதிர்க்கட்சிகள் போராட்டத்தைத் தூண்டி விடுகின்றன.. செல்லூர் ராஜு
மதுரை: அனிதா மரணத்தை வைத்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தைத் தூண்டி விடுவதாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், .அரியலுர் அனிதாவின் தற்கொலை என்பது மிகவும் வருந்தக்கூடிய செயல். அதே சமயம் மற்ற மாணவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
மாணவர்களின் இந்த நிலைக்கு காரணம் திமுக காங்கிரஸ் தான். நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு பல முயற்ச்சிகளை செய்ததது. ஆனால் நீதிமன்ற உத்தரவு இது.
இப்பொழுது நடைபெறும் போரட்டம் என்பது எதிர்க்கட்சிகள் தூன்டிவிட்டு நடைபெறும் போரட்டமே. ஆளும் அரசாங்கத்தின் அமைதியை கெடுக்கும் என்னமேயாகும். இதைப் போலவே தான் சகோதர சன்டையையும் பெரிதுபடுத்தினார்கள் எதிர்கட்சிகள் (அதாவது அதிமுக பிரிவுகளிடையே நடந்த சண்டை) என்று தெரிவித்தார் செல்லூர் ராஜு.
அனிதா தற்கொலையைத் தொடர்ந்து மக்கள் பெரும் விரக்தியிலும், கோபத்திலும், ஆதங்கத்திலும் உள்ளனர். மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.