எனக்கு ரஜினிதான் பிடிக்கும்...கட்சி ஆரம்பிக்கட்டும் பிறகு கருத்து சொல்வேன்.. செல்லூரார் அடடே ரிப்ளை!
எனக்கும் ரஜினிதான் பிடிக்கும், அவர் கட்சி ஆரம்பத்து கொள்கைகளை அறிவிக்கட்டும் பிறகு சொல்கிறேன் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
Recommended Video
மதுரை: எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக எனக்கு ரஜினிதான் பிடிக்கும், நான் அவரது ரசிகன். அவர் கட்சி அறிவித்து அதற்கான கொள்கைகளை தெரிவிக்கட்டும் பிறகு கருத்து செல்வேன் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் நேற்று முதல் அவரது ரசிகர்களை சந்தித்து வருகிறார். அப்போது அவர் கூறுகையில் வரும் 31-ஆம் தேதி எனது அரசியல் நிலைப்பாடு குறித்து கருத்து கூறுவேன் என்றார்.
இதுகுறித்து அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேட்டபோது, எம்ஜிஆருக்கு அடுத்து நான் ரஜினியின் ரசிகன். அவர் கட்சியை அறிவிக்கட்டும். அதற்கான கொள்கைகளை தெரிவித்த பிறகு நான் கருத்து கூறுகிறேன்.
தற்போதுள்ள நடிகர்கள் நேரடியாக முதல்வாராக துடிக்கிறார்கள். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மகேசன் தீர்ப்பாக ஏற்றுக் கொள்கிறேன்.
டிடிவி தினகரன் ஆர்கே நகரில் பணம் கொடுத்து வெற்றி பெற்றாரா என்பதை என்னிடம் கேட்டால் நான் என்ன சொல்வது, தேர்தல் ஆணையத்திடம் கேளுங்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.