அதிமுக கொறடாவாக செம்மலை நியமனம்: மதுசூதனன் அதிரடி!
அதிமுகவின் புதிய கொறடாவாக செம்மலையை அதிரடியாக நியமித்து மதுசூதனன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: அதிமுக புதியகொறடாவாக செம்மலை நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அதிமுக தற்போது இரண்டாக பிளவுபட்டுள்ளது. சசிகலா மற்றும் ஓபிஎஸ் தலைமையில் இரண்டு அணிகளாக பிளவுபட்டுள்ளன.
இந்த நிலையில் சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளார். முந்தைய ஓபிஎஸ் அரசில் கொறடாவாக நியமிக்கப்பட்ட அரியலூர் ராஜேந்திரன், அரசுக்கு ஆதரவாக அதிமுக எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
அதிமுக கொறடாவாக செம்மலை நியமனம்: மதுசூதனன் அதிரடி! pic.twitter.com/F43MsElkxq
— Oneindia Tamil (@thatsTamil) February 18, 2017
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தற்போது அமைச்சரவை மட்டுமே பதவியேற்றுள்ளது; புதிய கொறடா நியமிக்கப்படவில்லை என ஓபிஎஸ் அணி கூறி வந்தது. இந்த நிலையில் அதிமுக கொறடாவாக செம்மலையை அதிரடியாக நியமித்துள்ளார் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன்.
இதை சபாநாயகர் தனபாலுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார் மதுசூதனன். இந்த அதிரடியால் பரபரப்பு கூடியுள்ளது.