கரூரில் சங்கிலியால் தன்னைத் தானே கட்டிக்கொண்டு முதியவர் போராட்டம் - வீடியோ
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் ஒருவர் தன்னைத்தானே சங்கிலியால் கட்டிக்கொண்டு போரட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு உண்டானது.
கரூர்: கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த முதியவர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்கிலியால் தன்னைத் தானே கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் ரஹமதுல்லா. இவர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் தன்னைத் தானே சங்கிலியால் கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தினார். இதைக் கண்ட போலீசார் சங்கிலியை அவிழ்த்து அவரை மீட்டனர். அப்போது அவர் போலீசாரிடம், மருமகனும் அவரது உறவினர்களும் தன்னைத் தாக்கியதாகவும் அதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்ததாகவும் கூறினார்.
ஆனால், போலீசார் புகார் அளித்து பல நாட்களாகியும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், சங்கிலியால் கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தியதாகக் கூறினார். இதனையடுத்து, புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.