For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நகைக்காக மூதாட்டி கழுத்தறுத்துக் கொலை... திருவாடனை அருகே விபரீதம்- வீடியோ

திருவாடனை கரையாப்பட்டி கிராமத்தில் மூதாட்டி ஒருவர் நகைகளுக்காக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By Suganthi
Google Oneindia Tamil News

சிவகங்கை: திருவாடனை அருகேயுள்ள கரையக்கோட்டை கிராமத்தில் மூதாட்டி ஒருவர் நகைகளுக்காக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாடனை அருகேயுள்ளது கரையக்கோட்டை கிராமம். அங்கு நீலா என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்தார். இவருடைய ஒரே மகன் கனடாவில் இருக்கிறார். மூதாட்டி தினமும் டீக்கடைக்குச் சென்று டீ அருந்துவது வழக்கம்.

 A senior citizen who lived alone in karaiyakottai village murder for her jewels.

ஆனால் இரண்டு நாட்களாக அவரைக் காணவில்லை என்பதால் அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் கழுத்தறுபட்ட நிலையில் கிடந்துள்ளார். மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையையும் காணவில்லை. அவர் வீட்டில் இருந்த செல்போனையும் காணவில்லை.

ஊர் மக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் பின் விரைந்து வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
A senior citizen who lived alone in karaiyakottai village murder for her jewels. An police register a case and inquiring it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X