For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாலியல் குற்றச்சாட்டு கூறிய வேளாண் மாணவியிடம் திருவண்ணாமலை டிஎஸ்பி விசாரணை

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உதவி பேராசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு அளித்த சென்னை மாணவியிடம் திருவண்ணாமலை டிஎஸ்பி விசாரணை நடத்தினார்.

தண்டராம்பட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் சென்னை மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து விடுதி வார்டன்களான மைதிலி மற்றும் புனிதா ஆகியோரிடம் புகார் கொடுத்துள்ளார்.

Sex torture: DSP investigates the agricultural college student

எனினும் அந்த இரு பெண் பேராசிரியர்கள் இருவரும் அந்த மாணவியை சமாதானம் செய்து தங்கபாண்டியனுடன் அனுப்புவதற்காகவே திட்டமிட்டனர். இது தொடர்பாக புகாரின் பேரில் மாவட்ட நீதிபதி மகிழேந்தி விசாரணை நடத்தினார்.

இதுதொடர்பான அறிக்கையை அவர் எஸ்பி அலுவலகத்தில் தாக்கல் செய்தார். அதன் மீது எஸ்பி அலுவலக அதிகாரிகள் விசாரணை நடத்துவது வழக்கம். அதன்படி திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் கூறிய மாணவியிடம் டிஎஸ்பி வனிதா விசாரணை நடத்தினார்.

இதையடுத்து தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கைது செய்யப்படுவர் என்று தெரிகிறது.

English summary
Tiruvannamalai DSP investigates the agricultural college student who gives sex torture complaint on Professors.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X