For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவையில் ஒரு புனிதா... திருவண்ணாமலையில் ஒரு புனிதா... ஏம்மா பெயருக்கு ஏற்ப செய்யும் காரியமா இது!

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    மாணவியை ஆசிரியருடன் அட்ஜஸ்ட் செய்ய சொன்ன வார்டன்கள்!- வீடியோ

    சென்னை: கோவையில் விடுதி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அனுப்ப முயன்ற புனிதாவை போல் திருவண்ணாமலையிலும் ஒரு வார்டன் புனிதா இதுபோல் இழிவு செயலில் ஈடுபட்டுள்ளார். புனிதா என்ற பெயருக்கு ஏற்ப செய்யும் காரியமா என்று கேட்க தோன்றுகிறது.

    பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவதை நம்மால் காண முடிகிறது. அதுவும் பெண் பேராசிரியர்கள், வார்டன்களே தங்கள் சுயலாபத்துக்காக அப்பாவி மாணவிகளை பலிகடா ஆக்கப்படுகின்றனர்.

    குறிப்பாக வசதி இல்லாத பெண்களையும் நன்றாக படிக்காத பெண்களையும் குறி வைத்து அவர்களுக்கு படிக்காமலேயே மார்க்குகள், கை நிறைய பணம் உள்ளிட்டவை குறித்து ஆசை வார்த்தைகள் கூறி வலையில் சிக்க வைத்துவிடுகின்றனர்.

    நிர்மலாதேவி

    நிர்மலாதேவி

    அருப்புக்கோட்டையில் கல்லூரியில் கணித பேராசிரியையாக பணியாற்றிவர் நிர்மலா தேவி. இவர் அங்குள்ள மாணவிகளை குறிவைத்து மதுரை பல்கலைக்கழக அதிகாரிகளுடன் படுக்கையை பகிருமாறு வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து புகாரின் பேரில் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    வார்டன்

    வார்டன்

    இதுபோல் கோவை பீளமேட்டில் தனியார் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் வார்டனாக இருப்பவர் புனிதா. இங்கு கல்லூரி மற்றும் பணிக்கு செல்லும் ஏராளமான இளம்பெண்கள் தங்கியிருந்தனர். இந்நிலையில் புனிதா அந்த பெண்களை விடுதி உரிமையாளர்ஜெகந்நாதனுடன் படுக்கைக்கு செல்லுமாறு அழைத்துள்ளார். இதையடுத்து ஜெகந்நாதன் மர்மமான முறையில் இறந்துவிட்டார். புனிதாவும் போலீஸில் சரணடைந்துவிட்டார்.

    டார்ச்சர்

    டார்ச்சர்

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் உள்ள தமிழ்நாடு அரசு வேளாண் கல்லூரி விடுதியில் பிஎஸ்சி படித்து வரும் சென்னை மாணவிக்கு பேராசிரியர் தங்கபாண்டியன் என்பவர் தொடர்ந்து விடுதிக்கு சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு ஹாஸ்டல் வார்டன் புனிதா என்பவரும் மாணவியை சமாதானப்படுத்தி படுக்கைக்கு செல்லுமாறு அறிவுறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பெயருக்கு ஏற்ப...

    பெயருக்கு ஏற்ப...

    மாதா, பிதா, குரு, தெய்வம் என்று குருவுக்கு பிறகுதான் தெய்வத்தையே வைத்துள்ளனர். ஆனால் இது போன்ற சில ஆசிரியர்களால் அச்சமூகத்துக்கே அவப்பெயர் ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாமல் கோவையிலும் சரி, திருவண்ணாமலையிலும் சரி புரோக்கர் போல் மாணவிகளை கன்வின்ஸ் செய்த வார்டன்களின் பெயர் புனிதாவாம். பெயருக்கு ஏற்ப செய்பவர்கள் செய்யும் காரியமாக இது! என்று காரிதுப்ப வைக்கிறது இவர்களின் செயல்.

    English summary
    Sex torture given to Chennai Student who is studying in Agricultural college in Tiruvannamalai. There are 2 Punitha's in two different incidents who behave like brokers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X