24 மாணவிகளை பலாத்காரம் செய்த ஹெச்.எம். 'காமுகன்' ஆரோக்கியசாமிக்கு 55 ஆண்டு ஜெயில்!
பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 55 ஆண்டுகள் சிறை விதித்தது மதுரை நீதிமன்றம்.
மதுரை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மதுரை பள்ளி தலைமை ஆசிரியருக்கு 55 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரையில் உள்ள பொதும்பு அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவர் ஆரோக்கியசாமி. இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு அந்த பள்ளியில் படித்த 90-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இருப்பினும் பலாத்காரம் செய்ததாக 24 மாணவிகளின் பெற்றோரும், மாதர் சங்கமும் புகார் அளிக்க முன்வந்தனர். அந்த புகாரில் தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் சமூக நீதி, மனித உரிமை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சண்முக சுந்தரம், பாலியல் தொல்லை கொடுத்த ஆரோக்கியசாமிக்கு 55 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட 24 மாணவிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கவும் ஆரோக்கியசாமிக்கு உத்தரவிட்டார்.