இவர்தாங்க இந்தியாவின் முதல் "கீதாஞ்சலி ஐயர்"!
சென்னை: கீதாஞ்சலி ஐயரை யாரும் மறந்திருக்க முடியாது.. தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர்களில் மக்கள் மனதில் பதிந்து போனவர் இவர். அவரது ஆங்கில உச்சரிப்பு, செய்தி வாசிக்கும் ஸ்டைல்.. எல்லாமே தனி பாணியிலானது. அதேபோல தமிழில் ஷோபனா ரவி.
இன்று வரை செய்தி வாசிப்பிலும், செய்திகளைத் தருவதிலும் தூர்தர்ஷனை அடித்துக் கொள்ள ஆளே இல்லை. படித்தவர் முதல் பாமரர் வரை அத்தனை பேரைின் மனதையும் கவர்ந்த ஒரே செய்தி நிறுவனம் தூர்தர்ஷன் மட்டுமே.
சரி மேட்டருக்கு வருவோம்.. நேற்றுதான் தூர்தர்ஷன் முதல் முறையாக செய்திகளை ஒளிபரப்பத் தொடங்கியது. 1965ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி தூர்தர்ஷனின் முதல் செய்தி அறிக்கை இடம் ஒளிபரப்பானது, 5 நிமிடங்களுக்கு மட்டுமே அது இருந்தது. முதல் செய்தி வாசிப்பாளர் என்ற பெருமையைப் பெற்றவர் பிரதீமா பூரி.
Today in 1965: Doordarshan began a 5-minute TV news bulletin.
— Mohandas Menon (@mohanstatsman) August 8, 2016
Pratima Puri was the first Doordarshan newsreader.🙏 pic.twitter.com/7H5iQZaTYD
இன்று வரை இளமை மாறாமல் இருக்கும் தூர்தர்ஷன் செய்திகளுக்கு ஒரு வாழ்த்து சொல்லலாமே!