ஜெயலலிதா, கருணாநிதி சுகவீனத்திற்கு காரணம், பில்லி-சூனியம்! சொல்வது லண்டன் நாளிதழ்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா பில்லி, சூனியத்தால்தான் உடல் நல பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக பிரபல ஜோதிடர் ஒருவர் கூறியதாக லண்டனை சேர்ந்த பிரபல முன்னணி ஆங்கில நாளிதழான 'டெய்லி மெயில்' செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இதற்கு காரணம், ஏவல்தான் என்று கூறுகிறது டெய்லி மெயில்.
தமிழகத்தை சேர்ந்த ஒரு பிரபல ஜோதிடர் (பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் வெளியிட மறுப்பு), டெய்லி மெயில் பத்திரிகையிடம் இவ்வாறு கூறியதாக அந்த நாளிதழ் செய்து வெளியிட்டுள்ளது.
"ஜெயலலிதாவுக்கு எதிராக திமுகவில் சிலர் ஏகப்பட்ட பணத்தை வாரி இறைத்து, செய்வினை, பில்லி, சூனியங்களில் ஈடுபட்டனர். ஆனால் எதிர்க்கட்சியினரை மட்டுமே நான் குறை சொல்ல மாட்டேன். அவரின் சொந்த கட்சியிலும் கூட இதுபோல செய்திருக்க வாய்ப்புள்ளது" என அந்த ஜோதிடர் கூறியுள்ளார்.
மேலும், ஜெயலலிதாவுக்கு பிறகு கருணாநிதி உடல் நிலை பாதிப்படைந்துள்ளதற்கும், பில்லி, சூனிய வேலைகள் காரணம் என்று அந்த ஜோதிடர் கூறியுள்ளார். இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.