For Daily Alerts
Just In
ஹைட்ரோ கார்பன் திட்டம் வேண்டாம்... புதுக்கோட்டை முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம்
ஹைட்ரோகார்பன் எரிவாயு திட்டத்தை மத்திய அரசு செயல்படுவதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை: நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட கோரிக்கை விடுத்து மாவட்டம் முழுவதும் வணிகர்கள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்துகிறார்கள்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் தஙகள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும் கூறி அப்பகுதி மக்கள் 14 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டத்துக்கு வணிகர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.மக்களின் போராட்டத்துக்கு மாணவர்கள், திரைத்துறையினர், அரசியல் கட்சிகள் ஆகியன ஆதரவு அளித்துள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மனு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
Shops will be closed in Pudukottai District today as a protest against the implementation of Hydrocarbon Project.
Story first published: Wednesday, March 1, 2017, 8:00 [IST]