For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரையில் ரயில் முன் பாய்ந்து சப் இன்ஸ்பெக்டர் தற்கொலை

Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் போலீஸ் உதவி ஆய்வாளர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மதுரை மாநகர் காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் உத்தமராஜா.

இன்று காலை இவர் திடீரென்று, திருமங்கலம் அருகே ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்ட நிலையில் போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டனர்.

SI commits suicide in Madurai

அவருடைய தற்கொலைக்கான காரணம் இதுவரையில் தெரிய வரவில்லை. எனினும், ஒரு போலீஸ் அதிகாரி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

தற்கொலை செய்த இடத்துக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவருடைய மோட்டார் சைக்கிளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். குடும்பப் பிரச்சினையா அல்லது பணியில் ஏதேனும் பிரச்சினையா என்பது தெரியவில்லை.

English summary
Madurai SI got suicide before train in Tirumangalam, police inquire about the incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X