For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தெரு முனைகளில் திரளுங்கள்.. நாம் யாரென்று காட்டுவோம் - சிம்பு அழைப்பு

தெரு முனைகளில், முக்கிய சந்திப்புகளில் திரண்டு மக்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்த நடிகர் சிம்பு அழைப்பு விடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் தெரு முனைகளில் மக்கள் திரண்டு தொடர்ந்து போராட்டத்தை நடத்த வேண்டும் என்று நடிகர் சிம்பு அழைப்பு விடுத்துள்ளார்.

சமீபத்தில் மெரீனா கடற்கரையில் இளைஞர்கள், மாணவ, மாணவியர், பெண்கள் திரண்டு ஜல்லிக்கட்டுக்காக உரத்துக் குரல் கொடுத்து தமிழகத்தையே அதிர வைத்தனர். இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்தனர். இதையடுத்து நடிகர் சிம்பு தனது வீட்டின் முன்பு நடத்திய மவுனப் போராட்டம், தமிழகம் முழுவதும் இளைஞர்களை ஆர்ப்பரிக்க வைத்தது.

Simbu calls people to gather in streets to fight for Jallikattu

தமிழகம் முழுவதும் தற்போது போராட்டம் பரவி தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் சிம்பு இன்னொரு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் முக்கிய சந்திப்புகளில் அமர்ந்து தொடர் போராட்டங்களை நடத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாம் யாரென்று காட்டுவோம், ஜல்லிக்கட்டு தடை நீங்கும் வரை போராடுவோம் என்றும் சிம்பு அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ அழைப்பு:

English summary
Actor Simbu has called the people to gather in streets to fight for Jallikattu and asked the people to stage peaceful protests till the end.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X