என்ன நடக்கிறது இந்த மாநிலத்தில்? - சிம்பு ஆவேச வீடியோ
தூத்துக்குடி: துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து நடிகர் சிம்பு ஆவேசமாக பேசும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில் நடிகர் சிம்பு முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பேசியுள்ளார். அவர் பேசியிருப்பதாவது, தங்களின் உடல் நலனுக்காக போராடிய மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். என்ன நடக்கிறது இந்த மாநிலத்தில்.
பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைவர்கள் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கின்றனர். அதனால் இறந்தவர்கள் திரும்பி வருவார்களா?
போலீஸ் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் மக்கள் மீண்டும் கூடுவார்கள். வன்முறை வெடிக்கும். தொடர்ந்து போராடினால் உயிரை விட வேண்டியதுதான்.
இந்த அரசாங்கத்தால் பயனில்லை. இந்த அரசு வேண்டாம். தீர்வு வேண்டும் என்பதே எனது நோக்கம்.
நான் ஆங்கிலத்தில் பேசியிருக்கிறேன். ஆமாம் இந்த சம்பவத்துக்கு பின்னால் இருப்பவர்களை போய் சேர வேண்டும் என்பதற்காகவே ஆங்கிலத்தில் பேசியுள்ளேன். இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ வைரலாகியுள்ளது.