For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மொடக்குறிச்சி அருகே நாயை காப்பாற்ற முயன்ற அக்கா-தம்பி காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

நாயை காப்பாற்ற முயன்ற 2 பேர் காவிரி நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஈரோட்டில் அக்கா-தம்பி காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு- வீடியோ

    ஈரோடு: நாயை காப்பாற்ற போய் அக்காவும், தம்பியும் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி செல்வி. இர்வகள் கட்டிட தொழிலாளிகள். இவர்களுக்கு குமரேசன் 28, சிலம்பரசன் 22 என்ற இரு மகன்களும், சத்யா 25, ஜெகதீஸ்வரி 24, காஞ்சனாதேவி 21 என 3 மகள்களும் உள்ளனர்.

    Sister-Brother died in Cauvery river near Motakurichi

    இந்த நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால், இவர்கள் அனைவரும் தங்கள் நண்பர்கள் 6 பேருடன் இணைந்து மோட்டார் சைக்கிளில் மொடக்குறிச்சியை அடுத்துள்ள காங்கயம்பாளையம் நட்டாஸ்வரர் கோயில் பகுதியில் உள்ள காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றனர். அப்போது தங்கள் வீட்டில் வளர்ந்த நாயையும் அழைத்து சென்றனர். குளத்தில் குளிக்க செல்லும்முன் அனைவரும் கோவிலில் சாமி கும்பிட்டனர்.

    பின்னர் அனைவரும் ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுடன் வந்த நாய் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. நீரில் நாய் தத்தளித்ததை கண்ட சிலம்பரசனும், ஜெகதீஸ்வரியும் நாயினை கரைக்கு தள்ளி விட்டனர். ஆனால் இவர்கள் இருவரும் ஆற்றின் ஆழமான பகுதியில் சிக்கி கொண்டனர். இதனை கவனித்த உடனிருந்தவர்கள் அவர்களை இருவரையும் கடுமையாக மீட்க முயன்றும் முடியவில்லை.

    உடனடியாக மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் ததகவல் அளித்தனர். விரைந்த வந்த அவர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிலம்பரசன் மற்றும் ஜெகதீஸ்வரியை இறந்த நிலையில் மீட்டனர். அவர்களது சடலங்களை பார்த்து சகோதர, சகோதரிகள், மற்றும் உடன்வந்த நண்பர்கள் கதறி அழுதது நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English summary
    Two of the survivors of the dog were drowned in the river Cauvery. The brothers and sisters in the river, and when the friends were bathing, the dog that came with them was sinking in the river. Sister and brother saw the dog hanging on the shore as they saw the dog in the water. But both of them were trapped in the depths of the river and lost their lives
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X