6 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும்.. வட தமிழகத்திலும் கனமழைக்கு வாய்ப்பு.. எச்சரிக்கை!
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு பருவ மழையின் தாக்கத்தால் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளாது. வட தமிழகத்திலும் கன மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வட தமிழகம், புதுவையிலும் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் காலை அல்லது இரவில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
தென்தமிழக பகுதிகளில் 35 முதல் 45 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் 15 செ.மீ மழைப்பதிவாகியுள்ளது.