For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தை உலுக்கிய சென்னை சிறுமி ஹாசினி கொலை வழக்கில் வரும் 19ஆம் தேதி தீர்ப்பு!

தமிழகத்தை உலுக்கிய சென்னை சிறுமி ஹாசினி கொலை வழக்கில் வரும் 19 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்காக ஆஜராகி வாதாடிய வக்கீல் விலகல்!- வீடியோ

    சென்னை: தமிழகத்தை உலுக்கிய சென்னை சிறுமி ஹாசினி கொலை வழக்கில் வரும் 19 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என செங்கல்பட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் தஷ்வந்த். மென்பொறியாளரான இவர் மவுலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தான்.

    அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை கடந்த பிப்ரவரி மாதம் பாலியல் பலாத்காரம் செய்ததோடு சிறுமியை கொன்று உடலை எரித்தான் தஷ்வந்த்.

    சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமியை கொன்ற தஷ்வந்துக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெற்றன.

    தாயும் கொலை

    தாயும் கொலை

    இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி தனது தாய் சரளாவையும் கொலை செய்து தப்பினார். மும்பையில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    கோட்டில் ஆஜர்

    கோட்டில் ஆஜர்

    ஹாசினி கொலை வழக்கு விசாரணையின் போது செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் இருந்த தஷ்வந்துக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தஷ்வந்தை தொடர்ந்து செங்கல்பட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி வருகிறார்கள்.

    நீதிபதி வேல்முருகன்

    நீதிபதி வேல்முருகன்

    இந்நிலையில் சிறுமி ஹாசினி கொலை வழக்கில் வரும் 19ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என செங்கல்பட்டு மகளிர் நீதீமன்றம் அறிவித்துள்ளது. நீதிபதி வேல்முருகன் தீர்ப்பு வழங்கவுள்ளார்.

    தீர்ப்பு எப்படி இருக்கும்?

    தீர்ப்பு எப்படி இருக்கும்?

    தமிழகத்தை உலுக்கிய கொலை என்பதால் என்ன தீர்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. கொலையாளி தஷ்வந்த் மீது தனது தாயை கொலை செய்த மற்றொரு வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    A software engineer named Dhashwand killed six years old girl hasini after raping in chennai. In this case Chengalpattu Mahila court delivers judgement on 19th of this month.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X