For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நமிதாவை கட்டியணைத்து சினேகன் படுத்தியபாடு.. பிக்பாஸ் பார்த்து முகம் சுளித்த ரசிகர்கள்

பிக்பாஸ் வீட்டில் இருந்து நமீதா வெளியேறிய போது வீட்டில் கேட் வரை நமீதாவை விடாமல் கட்டிப்பிடித்த சினேகனை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து நமீதா வெளியேற்றப்பட்டது மக்களுக்கு, ஏன் சக போட்டியாளர்களுக்கெல்லாம் (உள்ளுக்குள்) சந்தோஷமான செய்தியாக இருக்கும் பட்சத்தில் சினேகன் கண் கலங்கும் அளவுக்கு நமீதாவின் பிரிவு கவிஞரை வாட்டுகிறதா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. வெளியுலக தொடர்பே இல்லாத நிலையில் காயத்ரி, கணேஷ் டுவிட்டர் கணக்கில் இருந்து டுவீட்கள் சென்றது முதல் இன்று அன்றாடம் பரபரப்புக்கு பஞ்சமில்லை.

ஏற்கெனவே எழுதி வைக்கப்பட்ட ஸ்கிரிப்டின் படி இவர்கள் செயல்படுகிறார்கள் என்றாலும், இந்த கேம் ஷோவுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கின்றனர்.

 கட்டிப்பிடிக்க ஆளில்லை

கட்டிப்பிடிக்க ஆளில்லை

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட ஜூலியானா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது மக்கள் பெரிதும் விரும்பினர். ஆனால் நிகழ்ச்சி தொடங்கிய இரண்டாம் நாளே தன்னை கட்டிப்பிடிக்க ஆளில்லை என்று நடிகர் ஸ்ரீயிடம் ஜூலி புலம்பிய புலம்பல் மக்களை ச்சீ என சொல்லவைத்தது. இதன் பிறகு ஜூலி செய்யம் அனைத்து விஷயங்களும் சர்ச்சைக்குரியவையாகவே இருந்து வருகிறது.

 அண்ணா என்று கட்டிப்பிடித்தல்

அண்ணா என்று கட்டிப்பிடித்தல்

சினேகன், சக்தி உள்ளிட்டோரை அண்ணா என்று அழைத்து விட்டு கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வருவது தமிழக பண்பாட்டுக்கு அழகா என்று மக்கள் முகம் சுளிக்கின்றனர். மக்களின் வறுத்தெடுப்புக்கு சினேகன், ஜூலி, காயத்ரி நமீதா ஆகியோர் உள்ளாகினர்.

 நமீதா வெளியேற்றம்

நமீதா வெளியேற்றம்

ஓவியாவின் நேர்மையான குணத்தால் அவர் இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று மக்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர். நாமினேட் செய்யப்பட்ட மீதமுள்ள கணேஷ், நமீதா இருவரில் நமீதா நேற்று வெளியேற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து சினேகனும், நமீதாவும் எத்தனை முறை கட்டிப்பிடித்து கட்டிப்பிடித்து நமீதாவின் மச்சான்களை வெறுப்பேற்றினர் தெரியுமா.

Recommended Video

    Big Boss Tamil, Arthi,Gayathri Raghuram are targerting Juliana-Filmibeat Tamil
     பெண்கள் பாதுகாப்பு

    பெண்கள் பாதுகாப்பு

    அப்பாவி பரணி இரு பெண்களுக்கு நடுவில் நுழைந்து செல்கிறார் என்று நமீதா குற்றம்சாட்டிய நிலையில், சினேகனை மட்டும் வாசல் வரை கட்டிப்பிடித்துக் கொண்டே இருப்பது எந்த வகையில் நியாயம என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

     மாற்றி மாற்றி...

    மாற்றி மாற்றி...

    ஒன்று கட்டிப்பிடிக்க ஆளில்லை என்று ஒருவர் புலம்புகிறார். இல்லாவிட்டால் கட்டிப்பிடித்து கட்டிப்பிடித்து இதுபோன்று நிகழ்ச்சி பார்ப்போரை முகம் சுளிக்கின்றனர். பரணியால் வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறிய நிலையில் சினேகனை மற்றவர்கள் ,கட்டி அணைப்பதும், அவர் மற்ற பெண்களை கட்டி அணைப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இதனால் நெட்டிசன்கள் அவரை பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.நமீதாவை எலிமினேட் செய்ததற்கு கட்டிப்பிடித்து அழும் சினேகன் இதுவரை சென்ற போட்டியாளர்களுக்கு மனதளவில் வருத்தம் கூட தெரிவிக்காதது ஏன் என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

    English summary
    Namitha was evicted from Bigg boss house. In the farewell, Snehan often hugs Namitha and expressed his sad moment.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X