For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெண்களை லத்தியால் தாக்கிய சென்னை போலீஸ்.. சமூக வலைதளங்களில் மக்கள் கொதிப்பு

சென்னையில் பெண்களை லத்தியால் தாக்கி அடித்த சென்னை போலீஸாரின் செயலுக்கு சமூக வலைதளத்தில் கண்டனங்கள் குவிகின்றன.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் நேற்று வெடித்த வன்முறையில் போலீஸாருக்கும் முக்கியப் பங்குண்டு என்று வெளியான செய்திகள் மற்றும் வீடியோ ஆதாரங்களைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் மக்கள் கடும் கொதிப்புடன் கருத்துக்களைப் பதிவிடடு வருகின்றனர்.

ஒவ்வொருவரும் போடும் கருத்துக்களை பிரசுரிக்க முடியாது. அந்த அளவுக்கு கடுமையானவைாக உள்ளன. போலீஸாரே ஆட்டோவைத் தீவைத்துக் கொளுத்தும் வீடியோ காட்சி வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது.

Social media boils on police attacks

அதை விட அனைவரையும் கொதிப்படைய வைத்துள்ளது, வீடுகளில் நின்று கொண்டிருந்த பெண்களை விரட்டி விரட்டி லத்திகளால் போலீஸார் அடிக்கும் காட்சிதான். இதென்ன போலீஸா இல்லை வேறா என்று கேட்கும் அளவுக்கு சற்றும் மனிதாபிமானமே இல்லாமல் போலீஸார் நடந்து கொண்டுள்ளதாக மக்கள் குமுறல் வெளியிட்டு வருகின்றனர்.

பைக்குகளை உடைத்த போலீஸ்


சென்னை கடற்கரை சாலையில் உள்ள பைக்குகளை போலீஸாரே லத்தியால் வெறித்தனமாக தாக்கி உடைக்கும் காட்சியைப் போட்டுள்ள தமிழகத்தின் ஜாலியாவாலாபாக் என்று ஹேஷ்டேக் போட்டு இவர் போட்டுள்ள கருத்து இது.

மக்களைத் தாக்கும் போலீஸ்


இந்த வீடியோவில் மக்கள் சொத்துக்களை சூறையாடி அவர்களை போலீஸார் தாக்கும் காட்சி உள்ளது. கொடூரமாக இருக்கிறது இந்த தாக்குதல்.

சீருடையில் உள்ள போலீஸார் நடந்து கொண்ட விதம் மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆட்டோவை கொளுத்தும் வீடியோவை மார்பிங் என்று டிஜிபி கூறுகிறார். ஆனால் பெண்களை தடியால் அடிப்பது, குடத்தைப் பிடுங்கி கீழே போட்டு வெறித்தனமாக உடைப்பது, தேடித் தேடி பெண்களை அடிப்பது கூடவா மார்பிங் என்று மக்கள் கேட்கிறார்கள். குடத்தைப் பிடுங்கி வெறித்தனமாக தாக்கும் அளவுக்கு போலீஸாருக்கு ஏன் அவ்வளவு கோபம் என்றும் மக்கள் ஆவேசமாக கேட்கிறார்கள்.

பெண்களை அடித்து நொறுக்கத்தான் போலீஸாருக்கு தடி கொடுத்தார்களா என்றும் பெண்கள் கோபாவேசம் காட்டுகிறார்கள். அந்த அளவுக்கு கோபத்தை கட்டுப்படுத்தி வைத்திருந்தது ஏன். எது அவர்களை இந்த அளவுக்கு குறி வைத்துத் தாக்கும் அளவுக்குக் கொண்டு போனது, போலீஸ் என்றாலே இப்படித்தான் என்பதை நிரூபித்து விட்டார்களே என்றும் மக்கள் வேதனை வெளியிட்டு வருகின்றனர்.

English summary
People are airing their ire on Police for their attack non women and youths yesterday in Chennai. They condemn the attacks and posting them in in Social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X