18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பை முதலில் வழங்குக- தலைமை நீதிபதியுடன் சமூக ஆர்வலர் தகராறு
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை முதலில் வழங்க கோரி சமூக ஆர்வலர் உயர்நீதிமன்றத்தில் தகராறு செய்தார்.
Recommended Video
சென்னை: அதிமுகவின் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை முதலில் வழங்க வேண்டும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியுடன் பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜன் தகராறு செய்ததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுகவின் கொறடா சக்கரபாணி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இன்று பிற்பகல் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது.
இந்நிலையில் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தது தொடர்பான வழக்கின் தீர்ப்பை முதலில் வழங்க வேண்டும் என்று சென்னை பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் இன்று திடீரென தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் தகராறு செய்தார். இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து தம்மிடம் தகராறு செய்த தேவராஜை நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்ற மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினருக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டார். இதையடுத்து தேவராஜன் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.