'அமைதி பூங்கா' தமிழகத்தில் கமல் மாதிரியானவர்கள் பிரச்சனையை தூண்டி விடுகின்றனர்: கொதிக்கும் அமைச்சர்!
அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தில் கமல் போன்ற சிலர் பிரச்சனையை தூண்டி விடுகின்றனர் என அமைச்சர் கருப்பணன் குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video
காஞ்சிபுரம்: அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தில் கமல் போன்ற சிலர் பிரச்சனையை தூண்டி விடுகின்றனர் என அமைச்சர் கருப்பணன் குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசு மீது கடுமையான விமர்சனங்களை கூறி வருகிறார். அமைச்சர்கள் மீதும் குற்றம்சாட்டி வருகிறார்.
இதனால் தமிழக அமைச்சர்களுக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்மையில் கல்லூரி மாணவர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசை திருடன் என்றார்.
இது அமைச்சர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமைச்சர் கருப்பணன் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் கமல் உள்ளிட்ட சிலர் பிரச்னையை தூண்டிவிடுகின்றனர் என அமைச்சர் கே.பி. கருப்பணன் குற்றம்சாட்டினார். அம்பத்தூர் தொழிற்பூங்காவில் மாசு பாதிப்பு எதுவும் இல்லை என்ற அமைச்சர் கருப்பணன் புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.