கன்னியாகுமரி அருகே நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை... தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி அருகே நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: கன்னியாகுமரி அருகே நீடிக்கும காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்தது. தென்மாவட்டங்களில் மிதமான மழைதான் பெய்தது.
இருப்பினும் வடகிழக்குப் பருவமழை தொடங்கி ஒரு மாதம் நிறைவயை உள்ள நிலையில் இதுவரை சராசரி அளவுக்கும் மிக குறைவான அளவிலேயே மழை பெய்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி முதல் லட்சத்தீவு வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி உள்ளது.
இதன் காரணமாக தென்மாவட்டங்களில் இன்று மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை குமரிக்கடல் முதல் லட்சத்தீவு வரை பரவி உள்ளதாகவவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.