தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை: தமிழகத்தின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கத்திரி வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் திருச்சி, வேலூர், சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் பட்டையை கிளப்பி வருகிறது.
கொளுத்தும் வெயிலால் சென்னை உட்பட பல நகரங்களில் பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. வெயில் காரணமாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெரும் அவதியடைந்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை வானிலை மையம் கூல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. தென் தமிழகம்,வட உள் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலடுக்கு சூழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெயில் கொளுத்தி வரும் நிலையில் வானிலை மையத்தின் இநத் அறிவிப்பு மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.