For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தந்தையுடன் தகாத உறவு.. பெண்ணை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிய மகன்.. திருப்பூரில் பயங்கரம்!

திருப்பூரில் தந்தையின் கள்ளக்காதலியை மகன் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கள்ளக்காதலை விட மறுத்ததால் பெண்ணை நடுரோட்டில் கத்தியுடன் விரட்டிய நபர்- வீடியோ

    திருப்பூர்: தந்தையின் கள்ளக்காதலியை மகன் ஒருவர் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கள்ளக்காதலுக்காக கணவன் மனைவியை கொல்வதும் மனைவி கணவனை கொல்வதும் கடந்த சில காலங்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருப்பூரில் தந்தையின் கள்ளக்காதலியை அவரது மகனே வெட்டிக் கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர் ஸ்ரீவித்யா நகர் பகுதியை சேர்ந்தவர் துரை. இவருக்கு ரத்தினம் என்ற மனைவியும் அருண் என்ற மகனும் உள்ளனர்.

    தையல் தொழிலாளி

    தையல் தொழிலாளி

    அருணுக்கு திருமணம் ஆகிவிட்டதாக தெரிகிறது. அருண் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் தையல் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

    ரங்கநாயகியுடன் பழக்கம்

    ரங்கநாயகியுடன் பழக்கம்

    இந்நிலையில் தந்தை துரை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி ரத்தினத்தை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அப்போதுதான் திருப்பூர் கொங்கணகிரி பகுதியை சேர்ந்த ரங்கநாயகி என்ற 45 வயது பெண்ணுடன் துரைக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    தந்தையின் கள்ளக்காதல்

    தந்தையின் கள்ளக்காதல்

    நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதனையறிந்த மகன் அருண், ரங்கநாயகியுடனான கள்ளக்காதலை கைவிடும்படி தந்தையை வற்புறுத்தியுள்ளார்.

    காதில் வாங்கவில்லை

    காதில் வாங்கவில்லை

    ஆனால் துரை அதனை கொஞ்சம் கூட காதில் போட்டுக்கொள்ளாமல் ரங்கநாயகியுடனான உறவை கைவிட மறுத்துள்ளார். இதைத்தொடர்ந்து தந்தையின் கள்ளக்காதலியான ரங்கநாயகியை சந்தித்த அருண் அவரையும் எச்சரித்துள்ளார். ஆனால் அவரும் சொல்வதை கேட்காமல் துரையுடனான உறவை தொடர்ந்துள்ளார்.

    கத்தியுடன் வந்த அருண்

    கத்தியுடன் வந்த அருண்

    இந்நிலையில் ரங்கநாயகி நேற்று பிற்பகல் திருப்பூர் குமரன் சிலை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த அருண் அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    தப்பி ஓடிய ரங்கநாயகி

    தப்பி ஓடிய ரங்கநாயகி

    அப்போது திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அருண், ரங்கநாயகியை குத்த முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த ரங்கநாயகி கத்தியை தட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ரோட்டில் ஓடினார்.

    ஓடிவந்த பயணிகள்

    ஓடிவந்த பயணிகள்

    இருப்பினும் விடாமல் துரத்திய அருண் ரங்கநாயகியின் கையில் குத்தினார். இதனைக் கண்ட அப்பகுதியில் இருந்த பயணிகள் ஓடிவந்து, அருணை பிடித்து அந்த பெண்ணை காப்பாற்றினர்.

    ரங்கநாயகி மீட்பு

    ரங்கநாயகி மீட்பு

    இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் ரங்கநாயகியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வைரலாகும் வீடியோ

    வைரலாகும் வீடியோ

    இந்த சம்பவம் தொடர்பாக அருண் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    English summary
    Son tried to kill fathers illicit lover in Thirupur. That video became viral on social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X