திவாகரன் மட்டுமல்ல ரஜினி, கமல் என யார் கட்சி ஆரம்பித்தாலும் காணாமல் போய்விடுவார்கள் : சி.வி சண்முகம்
திவாகரன் மட்டுமல்ல ரஜினி, கமல் என யார் கட்சி ஆரம்பித்தாலும் காணாமல் போய்விடுவார்கள் என்று சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் : திவாகரன் மட்டுமல்ல புதிதாக கட்சி ஆரம்பிக்கும் ரஜினி, கமல், தினகரன் என யாராக இருந்தாலும் விரைவில் காணாமல் போய்விடுவார்கள் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவின் சகோததரரான திவாகரன் இன்று புதிய் கட்சியைத் துவக்கி உள்ளார். தனது கட்சிக்கு அண்ணா திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று பத்திரிகையாளர்கள் தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்திடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்கையில், புதிதாக கட்சித் தொடங்கியவர்கள் யாராக இருந்தாலும் விரைவில் காணாமல் போவார்கள்.
அதற்கு திவாகரன், தினகரன், ரஜினி, கமல் என யாரும் விதிவிலக்கல்ல. தனது இருப்பு வெளியில் தெரிய வேண்டும் என்பதற்காகவே கமல்ஹாசன் தொடர்ந்து அரசை எதிர்த்து பேசிவருகிறார் என்று தெரிவித்துள்ளார்.