கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு செங்கல்பட்டு - ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் இயக்கம்
சென்னை: பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு செங்கல்பட்டு - ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி செங்கல்பட்டு - ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ராமேஸ்வரம் - செங்கல்பட்டு (ரயில் எண் 06138) சிறப்பு ரயில் ராமேஸ்வரத்திலிருந்து டிசம்பர் 23, 28, 30 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு செங்கல்பட்டு வந்து சேரும்.
செங்கல்பட்டு- ராமேஸ்வரம் (ரயில் எண் 06139) செங்கல்பட்டிலிருந்து டிசம்பர் 24, 29, 31 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.
இந்த ரயில்கள் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை ரோடு, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, விருத்தாசலம், விழுப்புரம் மற்றும மேல்மருத்துவத்தூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களுக்கான முன் பதிவு நாளை (டிசம்பர் 19) தொடங்குகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.