For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூட்ட நெரிசலை தவிர்க்க.. சென்னை - நெல்லை இடையே சுவிதா சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூர் - நெல்லை இடையே சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை எழும்பூரில் இருந்து செப்டம்பர் 9-ம் தேதி இரவு 9.05 மணிக்கு இயக்கப்படும் சென்னை எழும்பூர்- நெல்லை 'சுவிதா' சிறப்பு ரயில் (வண்டிஎண்:82601) மறுநாள் காலை 10.45 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக நெல்லையிலிருந்து செப்டம்பர் 11-ம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் 'சுவிதா' சிறப்பு ரயில் (82602) மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

Southern Railway to operate special trains from Chennai to Tirunelveli

எர்ணாகுளம் சிறப்பு ரயில்:

இதேபோல் சென்னை சென்டிரலில் இருந்து செப்டம்பர் 9-ம் தேதி இரவு 10.30 மணிக்கு எர்ணாகுளம் நோக்கி 'சுவிதா' அதிவிரைவு சிறப்பு ரயில்(82621) மறுநாள் காலை 10.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். மறுமார்க்கமாக எர்ணாகுளத்தில் இருந்து செப்டம்பர் 11-ம் தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் 'சுவிதா' அதி விரைவு ரயில் (82622) மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English summary
Chennai Egmore-Tirunelveli Suvidha special train will leave Chennai Egmore at 9.05pm on septemper and reach Tirunelveli at 10.45 am
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X