ஜல்லிக்கட்டு புரட்சி எதிரொலி.. மேலும் 12 ரயில் சேவையை ரத்து செய்தது தெற்கு ரயில்வே
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் எதிரொலியாக மேலும் 12 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் எதிரொலியாக இன்று 19 ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்நிலையில், மேலும் 9 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை 3 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேவை ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள் விவரம்:
வண்டி எண்: 17236, நாகர்கோவில் - கேஎஸ்ஆர் பெங்களூரு விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வண்டி எண்: 76807, திருச்சி - மானாமதுரை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மன்னார்குடி - திருச்சி (வண்டி எண் 76808), திருச்சி - பாலக்காடு (வண்டி எண்: 56713), பாலக்காடு - திருச்சி பயணிகள் ரயில் (வண்டி எண்: 56712) ஆகிய ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் திருச்சி - காரைக்குடி, நெல்லை - செங்கல்பட்டு, நாகர்கோவில் - கோவை ரயில்கள் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், காரைக்குடி - திருச்சி (வண்டி எண்: 76830), சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
நாளை ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள் விவரம்:
வாஞ்சி மணியாச்சி பயணிகள் ரயில்,கோவை - நாகர்கோவில், தூத்துக்குடி - மணியாச்சி ஆகிய ரயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.