For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜல்லிக்கட்டு புரட்சி எதிரொலி.. மேலும் 12 ரயில் சேவையை ரத்து செய்தது தெற்கு ரயில்வே

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் எதிரொலியாக மேலும் 12 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் எதிரொலியாக இன்று 19 ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்நிலையில், மேலும் 9 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை 3 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

Southern Railway today cancelled 12 trains

சேவை ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள் விவரம்:

வண்டி எண்: 17236, நாகர்கோவில் - கேஎஸ்ஆர் பெங்களூரு விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வண்டி எண்: 76807, திருச்சி - மானாமதுரை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மன்னார்குடி - திருச்சி (வண்டி எண் 76808), திருச்சி - பாலக்காடு (வண்டி எண்: 56713), பாலக்காடு - திருச்சி பயணிகள் ரயில் (வண்டி எண்: 56712) ஆகிய ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் திருச்சி - காரைக்குடி, நெல்லை - செங்கல்பட்டு, நாகர்கோவில் - கோவை ரயில்கள் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், காரைக்குடி - திருச்சி (வண்டி எண்: 76830), சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

நாளை ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள் விவரம்:

வாஞ்சி மணியாச்சி பயணிகள் ரயில்,கோவை - நாகர்கோவில், தூத்துக்குடி - மணியாச்சி ஆகிய ரயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

English summary
Southern Railway today cancelled 12 trains due to Jallikattu protest held across the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X