For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோடை விடுமுறை: சென்னையில் இருந்து எர்ணாகுளம், திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: கோடை விடுமுறை கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னையில் இருந்து எர்ணாகுளம், திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சுவிதா சிறப்பு ரயில்: ரயில் எண் 00601: ஏப்ரல் 13ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும்.

Southern Railway will operate special fare trains

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சுவிதா சிறப்பு ரயில்: ரயில் எண் 00602: ஏப்ரல் 17-ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

இந்த ரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் சுவிதா சிறப்பு ரயில்: ரயில் எண் 00605: ஏப்ரல் 13ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 6.20 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 7.40 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

ரயில் எண் 00604: ஏப்ரல் 17ஆம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து இரவு 7 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில் காட்பாடி, சேலம், ஈரோடு, கோவை, பாலக்காடு, திருச்சூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

English summary
Southern Railway will operate special trains from Chennai to Tirunelveli and Ernakulam to clear extra rush.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X