For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜூன் 19-ல் நெல்லை, எர்ணாகுளத்திலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தெற்கு ரயில்வே சார்பில் திருநெல்வேலி, எர்ணாகுளத்திலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருநெல்வேலியிலிருந்து ஜூன் 19 ஆம் தேதி பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.

Southern railways has announced special trains

கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.

இதுபோல, எர்ணாகுளத்திலிருந்து ஜூன் 19 ஆம் தேதி மாலை 7 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும்.

இந்த ரயில் அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்

எர்ணாகுளம் - வேளாங்கன்னி:

இதேபோல், ஜூன் 16, 23, 30-ல் எர்ணாகுளம் - வேளாங்கன்னி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

எர்ணாகுளத்திலிருந்து ஜூன் 16, 23, 30 ஆகிய தேதிகளில் மாலை 8.10 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் மறுநாள் காலை 9.30 மணிக்கு வேளாங்கன்னி சென்றடையும்.

இதுபோல, வேளாங்கன்னியிலிருந்து ஜூன் 17, 24, ஜூலை 1 தேதிகளில் பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் மறுநாள் காலை 4.15 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

இந்த ரயில்கள் அலுவா, திருச்சூர், ஒட்டபாலம், பாலக்காடு, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

English summary
Southern railways has announced that it will operate a special train from Tirunelveli to Chennai on june 19th
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X