கோவையில் சாலை விபத்தில் சிக்கி காயமடைந்தவரை மீட்ட அமைச்சர் எஸ் பி வேலுமணி
சாலைவிபத்தில் காயமடைந்தவருக்கு வேலுமணி முதலுதவி புரிந்தார்.
Recommended Video
கோவை: கோவையில் சாலை விபத்தில் சிக்கிய வயதான ஒருவரை மீட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூரிலிருந்து செல்வபுரத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது செல்வபுரம் என்னும் பகுதியில் உள்ள LIC காலனி அருகே வந்தபோது, முதியவர் ஒருவர் வாகனம் ஒன்று மோதியதில் பலமாக காயமடைந்து விழுந்து கிடந்தார்.
இதனைக் கண்ட வேலுமணி, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து, முதல் உதவி செய்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் படுகாயமடைந்த முதியவருக்கு உரிய சிகிச்சை அளிக்க அமைச்சர் கேட்டுக் கொண்டதுடன், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படியும் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.