For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏ-க்களுக்கு சபாநாயகர் விளக்கம் கேட்டு அதிரடி நோட்டீஸ்!

தினகரன் தரப்பு ஆதரவு எம்எல்ஏ-க்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: கட்சிக்கு எதிராக செயல்படுவதாக தலைமைக் கொறடா ராஜேந்திரன் மனு அளித்துள்ள நிலையில் தினகரன் ஆதரவு 19 அதிமுக எம்எல்ஏ-க்களுக்கும் சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதிமுக இணைப்புக்கு பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையை இழந்து விட்டதாக கூறி 19 எம்எல்ஏ-க்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு கொடுத்தனர்.

Speaker Dhanapal issues notice to 19 MLAs

இதையடுத்து தமிழக அரசின் தலைமை கொறடா ராஜேந்திரன் இன்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தலைமை கொறடா என்ற முறையில் தன்னிடம் தகவல் தெரிவிக்காமல் 19 எம்எல்ஏ-க்களும் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது கட்சிக்கு விரோதமானது.

எனவே கட்சிக்கு எதிராக செயல்பட்ட 19 எம்எல்ஏ-க்களின் பதவிகளையும் பறிக்க சபாநாயகர் தனபாலிடம் மனு அளித்துள்ளார். இந்நிலையில் தலைைம கொறடாவின் புகாருக்கு பதில் அளிக்க கோரி அந்த 19 பேருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் 19 எம்எல்ஏ-க்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? என கேட்டுள்ள சபாநாயகர், ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸில் உத்தரவிட்டுள்ளார்.

English summary
Speaker Dhanapal issues notice to 19 MLAs who are acting against party rules.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X