ஓட்டுநர் மணிகண்டன் உடல் இருக்கும் மருத்துவமனையில் பதற்றம்.. அதிரடி படை குவிப்பு
ஓட்டுநர் மணிகண்டன் உடல் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் பதற்றம் நிலவி வருகிறது.
சென்னை: ஓட்டுநர் மணிகண்டன் உடல் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் பதற்றம் நிலவி வருகிறது. புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகளுக்கும் சக ஓட்டுநர்களுக்கும் இடையில் சலசலப்பு உருவாகி இருக்கிறது.
சென்னை திருவான்மியூரில் கார் ஓட்டுநராக இருக்கிறார் மணிகண்டன். இவரது சொந்த ஊர் நெல்லை. இவர் காரில் சீட் பெல்ட் போடவில்லை என்று வேளச்சேரி காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் தாக்கி இருக்கிறார்.
இவருடன் சேர்ந்து இன்னும் மூன்று போலீஸ் இவரை தாக்கி உள்ளனர். சாலையில் பலர் பார்க்கும்படி இவர் தாக்கப்பட்டு இருக்கிறார். இதனால் மனமுடைந்த மணிகண்டன் தீக்குளித்தார்.
இதனால் மணிகண்டன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இவர் உடலில் 59 சதவிகித தீக்காயங்கள் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவமனை தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் இந்த தீக்குளிப்பு சம்பவத்தில் குற்றச்சாட்டப்பட்ட உதவி ஆய்வாளர் விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. விஜயகுமார் உதவி ஆய்வாளர் பதவியில் இருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் இன்று மதியம் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
அதே சமயம் அங்கு வந்த புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் மணிகண்டனின் பெற்றோரை மருத்துவமனையில் இருந்து அழைத்து செல்ல முயற்சி செய்தனர். இதற்கு சரியான காரணமா தெரிவிக்கப்படவில்லை. இதற்கு மணிகண்டனின் நபர்கள், சக ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. அதே சமயத்தில் மருத்துவமனைக்கு வெளியே ஆம் ஆத்மி போராட்டம் நடத்தி வருகிறது. போலீஸ் விஜயகுமார் மீது இன்னும் நடவடிககை வேண்டும் என்று சொல்லி வருகின்றனர்.
இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து அங்கு சிறப்பு அதிரடி படை குவிக்கப்பட்டு இருக்கிறது.