சரக்கு பெயர்களை சொல்லு.. பரிசுகள வெல்லு.. பொங்கலுக்கு இப்படி ஒரு போட்டி.. என்ஜாய் பண்ணுங்க குடிமக்கழ
வரும் பொங்கலுக்கு டாஸ்மாக் சரக்கு பெயர்களை கண்ணை மூடி மனப்பாடமாக ஒப்பித்தால் 1000 ரூபாய் பரிசு. எப்படியெல்லாம் பொங்கலை கொண்டாடுகிறார்கள் பாருங்கள்.
சென்னை: பொங்கல் திருநாளை வித்தியாசமாக கொண்டுகிறார்கள் மதுப்பிரியர்கள். எப்படி வித்தியாசம் என்று கேட்கின்றீர்களா? டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் சரக்குகளின் பெயர்களை மனப்பாடமாக சொன்னால் பரிசாம்.
தை பொங்கல் பண்டிகை என்றால், கோலப் போட்டி, விளையாட்டுப் போட்டி, ஓவியப் போட்டி என்று வகை வகையான போட்டிகள் சிறியவர்களுக்கும், பெரியவர்களுக்கும் எனத் தனித்தனியாக நடத்தி பரிசுப் பொருட்களை வழங்கப்படும்.
ஆனால் சென்னையில் நாளை மது பிரியர்களுக்கென பிரத்தேயக போட்டி நடைபெறுகிறது. காலை 10 மணியில் இருந்து மாலை 6 மணி வரை நடைபெற உள்ள இந்தப் போட்டியில் மதுப் பிரியர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். ஒரே ஒரு கண்டிஷன். அவர்கள் அனைவரும் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் சரக்குகளின் பெயர்கள் 100ஐ மனப்பாடமாக ஒப்பிக்க வேண்டும்.
அப்படி யாராவது தப்பில்லாமல் சரியாக சொல்லிவிட்டால் அவர்களுக்கு மது பாட்டில் பரிசா என்று கேட்காதீர்கள். பணம்தான் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவறில்லாமல் முழுமையாக 100 சரக்கு பெயர்களை சொல்லிவிட்டால் அவர்களுக்கு 1000 ரூபாய் முதல் பரிசாக வழங்கப்படும். இதுபோன்று 2வது பரிசாக 500 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
ரூம் போட்டு யோசிப்பாங்க போல..